திங்கள், 6 மே, 2013

அண்ணா யுனிவர்சிட்டியில் படிக்க வேண்டுமா?


அண்ணா யுனிவர்சிட்டியில் படிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான +2 மாணவர்களின் லட்சியம்.

இதற்கான விண்ணப்பங்களை எங்கே வாங்கலாம்? கட் ஆஃப் மார்க்கை கணக்கிடுவது எப்படி?

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது உண்மையா?
எத்தனை மதிப்பெண் வாங்கினால் சீட் கிடைக்கும்? என்று மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தெளிவாக இங்கே பதில் சொல்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர்.

“தமிழகம் முழுவதும் 554 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதில் நான்கு உறுப்புக் கல்லூரிகள், அரசு, அரசு மானியம் பெறும் கல்லூரிகள் அடக்கம். அண்ணா பல்கலையில் படிக்கணும்கிறதுதான் அனைத்து மாணவர்களின் கனவு விருப்பம். ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை.

நுழைவுத் தேர்வு இல்லை என்பதால், +2 மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. “கட் ஆஃப்’ மதிப்பெண் 200. அதிகபட்சம் 195 மதிப்பெண்களிலேயே அண்ணா பல்கலையில் இடம் நெறஞ்சிடும்.

அடுத்தடுத்த மார்க் எடுத்தவர்களுக்கு அரசு, அரசு மானியம் பெறும் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இது தவிர தனியார் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களிலும் சீட் கிடைக்கும்.

ஒரு விஷயம் தெரியுமா? நாட்டில் அதிக பொறியியல் கல்லூரிகள் இருக்கும் மாநிலம் ஆந்திரா. ஆனால் இடங்கள் நிரம்புவதிலும், வேலை வாய்ப்பிலும் தமிழக கல்லூரிகளுக்குத்தான் முதலிடம்.

எந்தப் பாடத்திட்டத்தில் படித்தால் அதிக மதிப்பெண்கள் “ஸ்கோர்" செய்ய முடியும்னு கேக்கிறாங்க. எந்தப் பாடத்திட்டம் என்பதெல்லாம் முக்கியமில்லை. மதிப்பெண்கள்தான் அளவுகோல். இருந்தாலும் “சி.பி.எஸ்.இ" யைவிட மாநில கல்வி வாரியம் (ஸ்டேட் போர்டு) நடத்தும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு.

அடுத்து +2வில், தமிழ் மீடியத்தைவிட, ஆங்கில மீடியம் படிப்பவர்கள் நிறைய மார்க் எடுக்கறதா நெனைக்கிறாங்க. ஒரு விஷயம் சொல்லட்டுமா? தமிழகத்தில் +2 பரீட்சை எழுதுபவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சம். இதில் தமிழ் மீடியம் படித்தவர்கள் 5.6 லட்சம் பேர். அதாவது 70% மீதமுள்ள 30% பேர்தான் ஆங்கில மீடியத்தில் படிக்கிறாங்க.

தமிழ் மீடியத்தில் படிச்சிட்டு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தால் பாடங்களைப் புரிஞ்சுக்கிறது கஷ்டம்னு நெனைக்கிறது தவறு. தாய் மொழியில் படிக்கும்போது பாடங்களைப் புரிஞ்சுக்கிறது ஈஸி. முதலாண்டில் இருக்கும் கொஞ்சம் கஷ்டமும் போகப்போக சரியாயிடும்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்தவர்தான். தமிழ் மீடியத்துலதான் படிச்சார். பின்னர் நகரக் கல்லூரிகளில் படித்து உலகம் போற்றும் விஞ்ஞானி ஆகவில்லையா? என லாஜிக்காகக் கேட்கும் மன்னர் ஜவகருக்கும் கிராமத்துப் பின்னணி இருப்பது சிறப்பு.

ஆமாம், எனக்குச் சொந்த ஊர் மதுரை மாவட்டம் பாலமேடு. ஜல்லிக்கட்டு நடக்கும் மிக பிரபலமான கிராமம். அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். தமிழ் மீடியம்தான். கல்லூரிக்கு வந்த பின்னர்தான் ஆங்கில வழி கல்வி அறிமுகமாச்சு. பின்னாட்களில் நான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தராக வரவில்லையா? என தன்னைப் பற்றி ரத்தின சுருக்கமாகச் சொல்லும் மன்னர் ஜவகர். தமிழும், ஆங்கிலமும் ஊடக மொழிகள் தானே தவிர, மதிப்பெண் ஸ்கோர் செய்வதற்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்கிற கருத்தையும் பதிவு செய்கிறார்.

ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து வருபவர்களுக்கு, பொறியியல் சேர்க்கையின்போது பத்து மதிப்பெண்கள் கூடுதலா கொடுக்கப்படுவதாகச் சொல்கிறார்களே? உதாரணமாக ஒரு மாணவர் +2வில் 160 மதிப்பெண் வாங்கியிருந்தால், அது 170 ஆக கணக்கிடப்படும்னு சொல்லப்படுவது உண்மையா?

இல்லை எந்தப் பாடத்திட்டத்தில் +2 முடித்தாலும், அவர்கள் வாங்கியிருக்கும் மார்க் மட்டும்தான் அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படும். ஒரு விஷயம் தெரியுமா? பொறியியல் அட்மிஷன் தொடங்குவதற்கு முன்பே சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கு அனுப்பிவிடும். அதனடிப்படையில் பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். மற்றபடி சி.பி.எஸ்.இ.யில் படித்து வரும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகை எதுவும் கிடையாது.

கல்லூரியில் சேரும்போது எந்தப் பாடப் பிரிவை எடுக்கலாம். கடினமாக இருக்குமா. முடித்த பின்னர் வேலை கிடைக்குமா என்கிற குழப்பம் வருவது இயற்கை. முன்பெல்லாம் பொறியியலில் சிவில், மெக்கானிக்கல்னு ரெண்டு பிரிவுகள் தான் பிரதானம். ஆனால் இப்ப எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், “இன்ஸ்ட்ருமெண்டேஷன்’, ரிமோட் சென்சிங்னு... பல புதுப் பிரிவுகள் வந்திருக்கு. அதுல ரெண்டு வகையுண்டு... அதன்படி, பல துறை சார்ந்த வேலைவாய்ப்பு இருக்கும் பாடப்பிரிவு முதல் வகை. அதனை கோர் குரூப் என்பார்கள்... உதாரணமாக, சிவில், மெக்கானிக்கல், இ.சி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ்... இப்படி ஆனால் தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி) கோர் குரூப் பின் கீழ் வராது. காரணம். ஐ.டி. படித்தவர்களுக்கு அந்தத் துறையில் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். வேலை வாயப்பை உறுதி செய்யும் பாடப்பிரிவின் மீது தான் மாணவர்களின் கவனம் இருக்கும். அதனால் இங்கே குறிப்பிடாத ஒரு சில பாடப் பிரிவுகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள்! என காரணத்தை அடுக்குகிறார்.

டிப்ஸ்!
* விண்ணப்பங்களை நேரடியாக அண்ணா பல்கலையில் வாங்கலாம். இணைய தளத்தில் விண்ணப்த்தை பதிவிறக்கம் செய்யலாம். வெளியூரில் இருப்பவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பல்கலையின் அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலும் விண்ணப்பங்களைப் பெறலாம். முந்தைய ஆண்டுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் பல்கலையின் இணையதளத்தில் இருக்கும். அதன்மூலம் என்ன கோர்ஸ் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.
* சேரப் போகும் கல்லூரியில் அடிப்படை வசதிகள், துறை ஆசிரியர்கள் (ஃபேகல்ட்டி) பற்றி அந்தக் கல்லூரிக்கே நேரடியாகச் சென்று உறுதி செய்யுங்கள்.
* கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மட்டுமே நடக்கும். அப்போது உங்களை அணுகி “கேன்வாஸ்’ செய்யும் இடைத் தரகர்களை தவிர்த்து விடுங்கள்.
* நீங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக இருந்தால் அதனை விண்ணப்பத்தில் மறக்காமல் குறிப்பிடுங்கள்.
* இட ஒதுக்கீடு (ரிசர்வேஷன்) முறையில் இடங்கள் நிரப்பப்படும் என்பதால் எந்தப் பிரிவில் இடம் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும். அதனால் டென்ஷன் வேண்டாம்.
* கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்துக்கு சற்று முன்னதாகவே நேர்காணலுக்குப் போய்விடுங்கள். காரணம் கவுன்சிலிங் முடிவுகள் உடனுக்குடன் அங்கேயிருக்கும் பெரிய திரையில் வெளியிடப்படும். நகத்தை கடித்தபடி எந்த பிரிவை செலக்ட் செய்வது என்கிற குழப்பத்துக்கே அங்கே விடை கிடைக்கும்.

உறுப்புக் கல்லூரிகள்?

1. காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் (சி.இ.ஜி.) கிண்டி.
2. ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர், கிண்டி.
3. மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.ட்டி) குரோம்பேட்டை.
4. ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி. கிண்டி.

கட் ஆஃப் கணக்கிடுவது எப்படி?

பொறியியலுக்கு கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் வாங்கும் மதிப்பெண்கள் மட்டும்தான் கட் ஆஃப்க்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி, கணக்கில் 200க்கு வாங்கும் மார்க்கை நூற்றுக்கு வரும்படி இரண்டால் வகுக்க வேண்டும். ஆனால் இயற்பியல், வேதியியலில் 200க்கு கிடைக்கும் மார்க்குகளை 50க்கு வரும்படி நான்கால் வகுக்க வேண்டும். இவற்றின் கூட்டுத் தொகையில் (100+50+50) கிடைப்பதுதான் “கட் ஆஃப்’ மதிப்பெண். உதாரணமாக, ஒருவர் கணக்கில் 200, இயற்பியல் 198, வேதியியலில் 196 எடுத்திருந்தால், அவரது கட் ஆஃப் 198.5 ஆக இருக்கும்.

இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி ! !


நண்பர்களே இந்த பதிவு பிடித்திருந்தால் தயவு செய்து மறக்காமலும் 

அலட்சியப்படுத்தாமலும்  மேலும் பலரை சென்றடைய உதவியாய் 

உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்."பாராட்டுகளை 

விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த 

மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை", இதைக் 

கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை 

சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன 

அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

புதன், 1 மே, 2013

VLC Media Player

அதிகமாக பயன்படுத்தபடும் மீடியா பிளேயர்களில் விஎல்சியும் ஒன்றாகும், அதிக நபர்களால் விருப்பி பயன்படுத்தபடும் மீடியா பிளேயரும் இதுவாகும். இதனை சிறப்பாக பயன்படுத்த சில சுருக்கு விசைகள் பயன்படுகிறன, அதை பற்றி கீழே காண்போம்.



Shortcuts for navigation while playing movie with VLC
[CTRL] + [F]
Open folder
[CTRL] + [D]
Open disc menu
[CTRL] + [R] or [CTRL] + [S]
Advanced open file
[CTRL] + [O]
Open single file/files
[CTRL] + [Up Arrow] or [CTRL] + [Down Arrow]
Increase/Decrease Volume
[F]
Switch from/to Fullscreen
[M]
Mute and Unmute Audio
[V]
Show, Switch, or Hide Movie Subtitles
[Space Bar]
Pause or Play the Movie
[P]
Play the Movie (from the very beginning)
[S]
Stop Playing the Movie
[SHIFT] +[Left Arrow] or [SHIFT] + [Right Arrow]
Fast Rewind or Fast Forward by 3 seconds
[ALT] + [Left Arrow] or [ALT] + [Right Arrow]
Fast Rewind or Fast Forward by 10 seconds
[CTRL] + [Left Arrow] or [CTRL] + [Right Arrow]
Fast Rewind or Fast Forward by 1 minute
[ESC]
Exit the Fullscreen mode
[+] or [-]
Play the movie faster or slower
[A]
Change the aspect ratio
[B]
Change Audio/Language track
[C]
Crop screen
[G] or [H]
Increase or Decrease subtitle delay
[J] or [K]
Increase or Decrease audio delay
[Z]
Change Zoom
[CTRL] + [1] or [CTRL] + [2] or [CTRL] + [3] or [CTRL] + [4]
Change the zoom mode
[T]
Show time
[CTRL] + [T]
Go to time




Shortcuts to manage VLC Player, Playlists and for using some Special Commands
[CTRL] + [H]
Hide/Unhide Controls
[CTRL] + [P]
VLC Player Preferences
[CTRL] + [E]
Adjust Audio/Video Effects
[CTRL] + [B]
Edit Bookmarks
[CTRL] + [M]
Open Messages
[CTRL] + [N]
Open Network
[CTRL] + [C]
Open the Capturing Device
[CTRL] + [L]
Open Playlist
[CTRL] + [Y]
Save Playlist
[CTRL] + [I] or [CTRL] + [J]
Media Information
[ALT] + [A]
Audio menu
[ALT] + [H]
Help menu
[ALT] + [M]
Media menu
[ALT] + [P]
Playlist menu
[ALT] + [T]
Tool menu
[ALT] + [V]
Video menu
[ALT] + [L]
Playback menu
[D]
Show the Movie path
[N]
Play Next Movie from Playlist
[F1]
Help
[F11]
Switch Window to/from Fullscreen Mode
[ALT] + [F4]
Quit VLC Media Player

விண்டோஸ் 8 மற்றும் 7 ல்நெட்வொர்க் மற்றும் பிரிண்டர் பகிர்தல்.

 நான் பதிவிட போகும் பதிவு விண்டோஸ் இயங்குதளத்தில் நெட்வொர்க் பகிர்வதை பற்றியும், பிரிண்டரை பகிர்வது பற்றியும் ஆகும்.

 நெட்வெர்க்கில் பிரிண்டரை பகிர முதலில் அனைத்து கணினிகளுக்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும். இல்லையெனில் முதன்மை கணினிக்கும்(SERVER) இணைக்கப்பட வேண்டிய அந்த குறிப்பிட்ட கணினிக்கும் இடையிலாது தொடர்பு இருக்க வேண்டும். இரண்டு வகையான தொடர்பு உண்டு கம்பியுடைய(WIRED) தொடர்பு மற்றொன்று கம்பியில்லா(WIRELESS) தொடர்பு ஆகும். இங்கு நாம் பார்க்க இருக்கும் கணினிகள் கம்பியுடைய தொடர்பில் இணைக்கப்பட்டிருப்பவையாகும். HUB உதவியுடன் அனைத்து கணினிகளும் இணைக்கப்பட்டுள்ளது. முதலில் பிரிண்டரை முதன்மை கணினியில்(SERVER) நிறுவவும். உரிய ட்ரைவரை கொண்டு பிரிண்டரை கணினியில் முழுமையாக நிறுவவும். பின் அதனை பகிர வேண்டும். 





பிரிண்டரை நிறுவி பின் வலதுகிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Printer Properties யை தேர்வு செய்யவும். பின் Sharing டேப்பினை தேர்வு செய்து Share this Printer எனும் டெக்ஸ்ட்பாக்சில் டிக் செய்து ஒகே செய்யவும்.


அடுத்ததாக Control Panel செல்லவும், அதில் Network and Sharing Center என்பதை தேர்வு செய்யவும்.  


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Change Advanced sharing settings என்னும் இணைப்பு சுட்டியினை கிளிக் செய்யவும். 


அடுத்து தோன்றும் விண்டோவில் All Networks என்னும் விரி தேர்வு விசையை அழுத்தி தோன்றும் கீழ்வரிசையில் பின் தேர்வுகளை சரியாக உள்ளிடவும். 

  
அடுத்து வரும் விண்டோவில் கிழ்வரும் தேர்வுகளை தேர்வு செய்யவும்.
  • Turn on sharing so anyone with network access can read and write files in the Public folders
  • Use 128-bit encryption to help protect file sharing connections (recommended)
  • Turn off password protected sharing
பின் Save Changes என்னும் பொத்தானை அழுத்தி சேமித்து கொள்ளவும்.


இது Public கோப்பினை பகிர மட்டுமே ஆகும். மேலும் நீங்கள் ஏதாவது கோலன்களை(OR)ட்ரைவினை பகிர விரும்பினாலும் இதே முறைதான் அந்த குறிப்பிட்ட ட்ரைவினை மட்டும் பகிர்ந்தால் போதுமானது ஆகும்.


பிண்டரை பகிர Guest or Public என்னும் விரிதேர்வு விசையை அழுத்தி அதில் 
  •  Turn on network discovery 
  •  Turn on file and printer sharing
என்ற தேர்வுகளை தேர்வு செய்து பின் Save changes எனும் பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும். அவ்வளவு தான் முதன்மை கணினியில் வேலை முடிந்தது. ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.

பின் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது, நெட்வொர்க்கில் உள்ள கணினிகளிலும் மேலே குறிபிட்டவாறு தேர்வுகளை தேர்வு செய்யவும். கீழே உள்ள படங்களை கவனிக்கவும்.




 


அடுத்து நெட்வொர்க்கில் உள்ள கணினிகளில் பிரிண்டரை இணைக்க Control Panel சென்று பின் Devices and Printers என்பதை கிளிக் செய்யவும்.

   
அடுத்து தோன்றும் விண்டோவில் Add a Printer எனும் பொதியை கிளிக் செய்யவும். 


அடுத்து தோன்றும் விண்டோவில் Add a network, wireless or Bluetooth printer என்பதை தேர்வு செய்யவும்.  


சிறிது நேரம் நெட்வொர்க்கில் பிரிண்டர் இருக்கிறதா என ஆராய்ந்து அதனை காட்டும். அந்த குறிப்பிட்ட பிரிண்டரை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும். 


பிரிண்டருக்கு உரிய ட்ரைவர் குறிப்பிட்ட கணினியில் நிறுவப்பட அனுமதி கேட்கும். அனுமதியளித்த பின்பு ட்ரைவர் நிறுவப்படும்.





அவ்வளவு தான் இதே முறையினை பயன்படுத்தி நெட்வெர்க்கில் உள்ள அனைத்து கணினியிலும் ட்ரைவரை நிறுவிக்கொள்ளவும்.




நெட்வொர்க்கில் உள்ள கணினியில் பிரிண்டர் நிறுவப்பட்டு இருப்பதை மேலே உள்ள படத்தில் காணலாம். 

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். 

சில
 வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும்.

இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

ஹார்ட்வேர் பிரச்னை

கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.

ரம் மெமரி சிப்ஸ்

ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.

ஹார்ட் டிஸ்க் டிரைவ்

பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

வீடியோ கார்ட்

சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

வைரஸ்

பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரிண்டர்

பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.

சாப்ட்வேர்

முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

அதிக வெப்பம்

இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

மின் ஓட்டம்

கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கவும்.